1. ஆரம்ப
காலத்தில் அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிஸ்மஸ் பழம்
எனப் பெயரிட்டனர். பொதுவாக இந்தப் பழத்தை
கேக், பாயாசம், பிஸ்கட் என்று பலகார
வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
2. இதில்
வைட்டமின் மற்றும் சுண்ணாம்புச் சத்து
அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவருக்கும் உகந்தது தான் இந்த
உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக
மருத்துவக் குணங்களைக் கொண்டது.
3. உலர்ந்த
திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப்
பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள்
சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப்
பாதுகாப்புக்குரியதாக்கும்.
4. குழந்தைகளுக்கு
எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும்,
பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும்
தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம்
அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில்
அதிகம் நிறைந்துள்ளது.
5. இரத்த
விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம்
ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும்
உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து
வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக
சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து
இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும்
இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
6. உடல்
வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை
சேர்த்து கஷாயம் செய்து அருந்தி
வந்தால் உடல் வலி அனைத்தும்
தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது
ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல்
நல்லது.
7. கர்ப்பிணிப்
பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத்
தேவையான அனைத்து சத்துக்களும் தாயின்
மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில்
முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள்
உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க
வைத்து பருகி வந்தால் பிறக்கும்
குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
8. பெண்களுக்கு
மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில்
வலி இருந்து கொண்டே இருக்கும்.
இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக
உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில்
போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால்
வலி மறைந்து போகும்.
9. வயது
முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின்
உடலில் ஜீரண உறுப்புகள் வலுவிழந்து
இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம்
ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச்
சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது.
இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே. தினமும்
படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச்
சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் மலச்சிக்கல்
தீரும்.
10. குடற்புண்
ஆற அஜீரணக் கோளாறுகளால் குடலில்
உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல்
சுவறை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப்
பழங்களை நீரில் கொதிக்க வைத்து
கஷாயம் போல் செய்து அருந்தி
வந்தால் குடற் புண்கள் குணமாகும்.
11. இதயத்
துடிப்பு சீராக சிலருக்கு இதயம்
மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான
பதற்றத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப்
பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின்
மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு
சீராகும்.
12. சுகமான
நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு
அரைமணி நேரம் முன்பு பாலில்
நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு
கொதிக்க வைத்து வடிகட்டி பாலை
அருந்தி வந்தால் சுகமான நித்திரை
கிடைக்கும்.
13. தினமும்
உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.
0 comments:
Post a Comment