புரட்டாசி
மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை
பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால்
சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து
வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
இது வெயில் கால வெப்பத்தை
காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல்
சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதனால்
தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர்
நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை
திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை
உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.
துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே
புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம்
ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.
பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...
0 comments:
Post a Comment